2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண சுகாதாரத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 23 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எச்.ஏ.ஹுஸைன்,ஏ.எஸ்.எம்.யாசீம்

தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி காலவரையறையின்றி கடந்த ஆறாம் திகதியிலிருந்து கிழக்கு மாகாண சுகாதாரத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவந்த ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை கைவிடப்பட்டது.

கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இவர்கள், தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்றும் புதியவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்துக்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், சுகாதாரத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

தேர்தலின் பின்னர் நியமனம் வழங்கும் விபரம் கலந்துரையாடப்படும்.  இதன்போது, சுகாதாரத் தொழிலாளர்களின்  கோரிக்கையை கவனத்திற்கொண்டு நியமனம் வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்படுமென்று முதலமைச்சர் தெரிவித்தார்.  ஆகையால், போராட்டத்தை முடித்து கலைந்து செல்லுமாறும் அவர்  கேட்டுக்கொண்டமைக்கு இணங்க அனைவரும் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .