2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்கான கூட்டங்களில் ஆசிரியர் சமூகத்தை தவிர்க்கவும்'

Suganthini Ratnam   / 2015 ஜூலை 23 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ஏ.எச்.ஏ.ஹூஸைன்

பல்வேறு பணிகளுக்காக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் ஆகியோரை அழைத்து வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்கான கூட்டங்களை நடத்துவதை  முற்றாக தவிர்;க்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் உதவித் ஆணையாளர் ஆர்.சசீலன்  அறிவித்துள்ளார்.

இது தொடர்பான  தேர்தல் ஆணையாளரின் சுற்றுநிரூபம் மாவட்டத்திலுள்ள சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில்,  இவை   வியாழக்கிழமை மாவட்டத்திலுள்ள சகல அதிபர்களுக்கும் கிடைத்ததாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 அந்த சுற்றுநிரூபத்தில், 'வேட்புமனுத் தினத்தில் தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை அரச சொத்துக்கள் மற்றும் அரசாங்க  அலுவலர்கள், ஊழியர்கள். அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் எந்தவொரு வேட்பாளரொருவரையும் ஊக்குவிப்பதற்காகவோ அல்லது பாதிப்புறச் செய்வதற்காகவோ பயன்படுத்துதல்  சட்ட  முரணானது மாத்திரமன்றி , தார்மீக விரோதச் செயலுமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இலங்கையின் சில பிரதேசங்களில் அரசியல்வாதிகளினால் சிரேஷ்ட அரசாங்க அலுவலர்களின் ஒத்துழைப்புடன்  அரசாங்கப் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் கல்வித்துறை சாராத பணியாட்குழு அங்கத்தவர்கள் ஆகியோர் உத்தியோகபூர்வக் கூட்டங்கள், வைபவங்கள், கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள், வேதனக்கடன்கள், முற்பணங்களை பகிர்ந்தளித்தல் போன்றவற்றுக்காக வரவழைக்கப்பட்டு  நாடாளுமன்ற வேட்பாளர்களின் ஊக்குவிப்புக்கான அரசியல் நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளன.  

இதுவொரு விரும்பத்தகாத செயற்பாடாக இருப்பதுடன், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு இது பாரிய இடையூறாகவும் உள்ளது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .