2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு நகரிலுள்ள உணவு விடுதிகளில் சோதனை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 23 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரின் கோட்டைமுனை மற்றும் வெட்டுக்காடு பகுதிகளிலுள்ள உணவு விடுதிகளில்; பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நேற்று புதன்கிழமை காலை திடீர்ச்  சோதனை மேற்கொண்டனர்.

உணவு விடுதிகளில் காலையில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் தரம் தொடர்பில் பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பழைய உணவுகளை குளிரூட்டியில் வைத்து சூடாக்கி  காலை வேளைகளில் சில உணவு விடுதிகள் விற்பனை செய்துவருவதை இந்தச் சோதனையின்போது, கண்டுபிடித்ததாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

கோட்டைமுனை பகுதியில் இரண்டு உணவு விடுதிகள் மீதும்  வெட்டுக்காடு பகுதியில் நான்கு உணவு விடுதிகள் மீதும்  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ச்சியான இவ்வாறான திடீர்ச் சோதனைகள் உணவு விடுதிகளில் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .