2025 மே 15, வியாழக்கிழமை

வெளியிணை இயந்திரம் திருட்டு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 24 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர், சவுக்கடிக் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடிப்படகின் வெளியிணை இயந்திரமொன்று திருடப்பட்டுள்ளது என்று முறைப்பாடு  செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை வழமைபோன்று ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவிட்டு படகு கரையொதுக்கி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படகின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை பகல் படகைப் பார்த்தபோது, படகின் வெளியிணை இயந்திரம் திருட்டுப்போனமை தெரியவந்தது.

இந்த இயந்திரத்தின் பெறுமதி சுமார் 2 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .