2025 மே 15, வியாழக்கிழமை

அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹூஸைன்

மட்டக்களப்பு நகர மத்தி வாவியில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த ஆணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு மட்டக்களப்புப் பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுமார் 55 வயது மதிக்கத்தக்க குறித்த நபர்  வெள்ளை நிற மேற்சட்டை அணிந்துள்ளதுடன் வெள்ளை நிறமான தாடியுடன் தலையில் சிறிய காயத்துடன் காணப்படுகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச் சடலத்தை அடையாளம் காணும் பொருட்டு மட்டக்களப்பு பொலிஸார் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .