Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 29 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா வீதியில் இடம்பெற்றுள்ள விபத்தில் படுகாயமடைந்த சின்னத்தம்பி மரியங்கண்டு (வயது 70) என்ற பெண் இன்று புதன்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு தனது குடும்பத்துத்துடன் ஏறாவூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய இவர், வீடு நோக்கிச் செல்ல ரயில் நிலையத்தில் நின்ற முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.
இதன்போது, இவர் பயணித்த முச்சக்கரவண்டியும் இன்னொரு முச்சக்கரவண்டியும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் பயணித்துள்ளன. அவ்வேளையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே வைக்கப்பட்டிருந்த அழகுத் தாவரச் சட்டியில் மோதி தடம்புரண்டு இரண்டு முச்சக்கரவண்டிகளும் நொருங்கியுள்ளன.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளார்.
முச்சக்கர வண்டியின் சாரதியொருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளபோதிலும் கைதுசெய்யப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago