2025 மே 15, வியாழக்கிழமை

விறகு வெட்டச் சென்றவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எஸ்.சபேசன்

விறகு வெட்டுவதற்குச் சென்ற ஒருவர் மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூச்சுக்கூட்டுக் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

மண்டூரை பிறப்பிடமாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 15ஆம் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா கோவிந்தசாமி (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது சடலத்துக்கு அருகில் கத்தியும் கோடரியும்  காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.   

இது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .