2025 மே 15, வியாழக்கிழமை

தாக்குதல் சம்பவம்; இருவரை கைதுசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் உத்தியோகஸ்தர்களையும் காத்தான்குடியில் தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவித்து மகளிர் மாநாடு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்; நடத்தப்படுவதாகவும் அதில் பெண்களுக்கு வெற்றிலைச் சின்னமும் வேட்பாளரின் இலக்கமும் பொறிக்கப்பட்ட தேநீர் கோப்பை உட்பட சில பொருட்கள் வழங்கப்படுவதாகவும் இது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என்று மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடமும் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர்.
 
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட உதவி;த் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தலைமையிலான அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் விசாரணை செய்வதற்காக  காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்துக்கு செவ்வாய்க்கிழமை (04) சென்றபோது, முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் இவர்களின் விசாரணைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன், அங்கு சென்ற உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தலைமையிலான அதிகாரிகள் குழுவுக்கும் அவர்களுடன் சென்ற பொலிஸாருக்கும் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன், அவர்களை  தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில்  காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் செவ்வாய்க்கிழமை (04) முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்  மற்றும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள்  தலைவர் ஆகிய இருவரையும் கைதுசெயவதற்கு  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில்  விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்; காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்வதற்காக கொழும்பிலுள்ள தேர்தல்கள் செயலகத்திலிருந்து அதிகாரிகள் குழுவொன்று காத்தான்குடிக்கு செல்லவுள்ளதாகவும் இது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்; தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .