2025 மே 14, புதன்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.எஃப்.காமிலா

தியாவட்டவான் அரபா வித்தியாலயத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில்,  இருவர் படுகாயமடைந்த நிலையில், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியிருந்து வாழைச்சேனை நோக்கி வந்த எல்ப் ரக வாகனமும் மோட்டார்  சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்தாகவும் மோட்டார்; சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவரின் நிலை  கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .