2025 மே 14, புதன்கிழமை

கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வீதியில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாகக் கூறப்படும்  45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணியில் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை தாம் கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த சந்தேக நபரிடமிருந்து 3,850 மில்லிகிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சந்தேக நபரை கைதுசெய்ததுடன், இவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .