2025 மே 01, வியாழக்கிழமை

600 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 06 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்கள் 600 பேருக்கு கற்றல் உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை (5) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இதன்போது ஒரு மாணவருக்கு 650 ரூபா வீதம்  பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதாக காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அகமட் லெவ்வை தெரிவித்தார்.

இதன்போது, மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அகமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டச்செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், அம்பாறை உதவி பிரதேச செயலாளர் எம்.அன்சார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய  மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவ வேண்டும் எனும் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு ஏற்ப இந்த வைபவம் நடத்தப்படுவது மகிழச்சியளிக்கின்றது. தமிழ் முஸ்லிம் மாணவர்களை இணைத்து இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படுவதானது இன நல்லுறவுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்' என்று தெரிவித்தார். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .