Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 நவம்பர் 01 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் - செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் அன்றாட அலுவல்களில் அதிக சிரமத்தை எதிர்நோக்குவதாக மின் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பல மாதங்களாக, இப்பிரதேசங்களில் பிரதி வியாழக்கிழமை தோறும் முழு நாளும் இருந்து வந்த மின் துண்டிப்பு இப்பொழுது வாரத்தின் மேலும் ஒரு தினத்திலும் அமுலாக்கப்படுவது குறித்து மின் பாவனையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அதற்கும் மேலதிகமாகவே தற்போது தினமும் திடீர், திடீரென மின்விநியோகம் தடைப்படத்தப்படுவதால் அதிக அசௌகரியங்களை மின் பாவனையாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக பல மின்னியல் சாதனங்களும் பழுதடைந்து விடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னறிவித்தல் ஏதுமின்றி அடிக்கடியும், சிலவேளை குறுகிய நேரமாகவும் சிலபோது ஒரு மணி நேரத்துக்குக் குறைவாகவும் அல்லது கூடுதலாகவும் இந்த மின் தடை ஏற்படுத்தப்படுவதாக மின் பாவனையாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்தத் திடீர் மின் தடை குறித்து ஏறாவூர் - செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்துடன் தொடர்புகொண்டு கேட்டால், வழமையான திருத்த வேலைகள், மின் விநியோக விஸ்தரிப்பு வேலைக்காக மின்சாரம் தடைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago