2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, டச்பார் கடற்கரையை அண்டிய பகுதியில் ஆணொருவரின் சடலம், இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளது.

கல்லடி, வேலூர் 8ஆம் குறுக்கு தெருவில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான ராமநாதப்பிள்ளை (வயது 50) என்பவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் , மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X