Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
வா.கிருஸ்ணா / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதிக்குள், கல்முனை மாநகரசபை மேயர் அத்துமீறிச் செயற்பட்டுவருகின்றார் எனக் குற்றுஞ்சாட்டிய, அப்பகுதி மக்கள், அதனைக் கண்டித்து, இன்று (21) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் ஒன்றுகூடிய பெரியகல்லாறு பிரதேச மக்களும் குறித்த பிரதேச பிரதேசசபை உறுப்பினர் எஸ்.கணேசநாதனும், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இவ்விடத்துக்கு வருகை வந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், பிரதேச செயலகக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
19 minute ago
1 hours ago
3 hours ago