2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இயந்திரப்பாதையை திருத்த வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 14 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட   திகிலிவெட்டை ஆற்றைக் கடப்பதற்கான இயந்திரப்பாதை பழுதடைந்தமையைத் தொடர்ந்து, அந்த இயந்திரப்பாதை கடந்த மூன்று வாரங்களாக இயங்காமையால் பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, பழுந்தடைந்துள்ள இயந்திரப்பாதையை திருத்தி சேவையில் ஈடுபடுத்துமாறும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சந்திவெளிக் கிராமத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் திகிலிவெட்டைக் கிராமம் உள்ளது. இந்த இரண்டு கிராமங்களுக்கும் இ;டையிலான போக்குவரத்தை தரைவழியாக மேற்கொள்வதாயின், கிரான் - புலிபாய்ந்தகல் தரைவழியாக சுமார் 12 கிலோமீற்றர் தூரம் சுற்றியே பயணிக்க வேண்டும். ஆனால், இந்த இரண்டு கிராமங்களுக்கும் இடையிலான போக்குவரத்தை திகிலிவெட்டை ஆற்றின் மூலமாக சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் மாத்திரம் மேற்கொள்ள முடியும்.

இந்த இயந்திரப்பாதை இயங்கமையால் மாற்றீடாகத் தோணி மற்றும் இயந்திரப்படகுகள் மூலமாக சேவை மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும், திகிலிவெட்டை ஆற்றில் முதலைகள் வாழ்வதால் தோணி, படகுகள் மூலம் ஆபத்தான பயணத்தையே மேற்கொள்வதாக பயணிகள் தெரிவித்தனர்.

இந்த இயந்திரப்பாதை பழுதடைந்துள்ளமை தொடர்பில்
கோறளைப்பற்று பிரதேச சபை நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் தெரிவித்தபோதிலும்;, எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் பயணிகள் கூறினர்.

இந்த இயந்திரப்பாதையை திருத்துவது தொடர்பில்
கோறளைப்பற்று பிரதேச சபைச் செயலாளர் சாலிமுகமட் சிஹாப்டீனிடம் கேட்டபோது, 'ஆற்றுப் படகுச் சேவைக்கு வீதி அபிவிருத்தித் திணைக்களமே பொறுப்பு. இருப்பினும், மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நன்மை கருதி கோறளைப்பற்று பிரதேச சபை இயந்திரப்பாதை சேவையை மேற்கொள்கின்றது. இயந்திரப்பாதையின் கீழ்த்தட்டு உடைந்ததன் காரணமாக கடந்த வருடம் 320,000 செலவில் திருத்தப்பட்டு சேவை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, இந்த இயந்திரப்பாதையின் கீழ்த்தட்டு துருப்பிடித்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகிறது. ஆகவே, இந்த இயந்திரப்பாதையை திருத்துவது தொடர்பிலும் மண்முனைத்துறையில் சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட இரண்டு இயந்திரப்பாதைகளில் ஒன்றை வழங்குமாறும் வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்' என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X