Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யு.பீ.ஏ.டி.கே.பீ.கருணாநாயக்க தெரிவித்தார்.
இக்கொலைச் சம்பவத்தை தொடர்ந்து இதுவரையில் 8 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.
நூர்முஹம்மது ஹுஸைரா (வயது 56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணு (வயது 32) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (10) நள்ளிரவு வேளையில் இ;வர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த கொலையாளிகள், பலகையொன்றினால் இவர்களை அடித்துக் கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலங்கள் வீட்டு விறாந்தையில் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டதுடன், வீட்டுச் சுவரிலும் குறித்த பலகையிலும் இரத்தக்கறை காணப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் தாயும் மகளும் மாத்திரமே வாழ்ந்துவந்துள்ளனர்.மகளின் கணவர் கடந்த ஒன்றரை வருடகாலமாக மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்துவருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
16 minute ago
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
16 minute ago
36 minute ago
3 hours ago