Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பழுலுல்லாஹ் பர்ஹான்
அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தினால் பிரகடனம் செய்யப்பட்டு, ஓக்டோபர் மாதம் 9ம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகள் எதிர்வரும் தினங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைவாக காத்தான்குடி தபால் நிலையம் ஏற்பாடு செய்துள்ள உலக அஞ்சல் தின நிகழ்வு நாளை (25) காலை காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
காத்தான்குடி பிரதேச தபால் அதிபர் கே.எம்.மஸாஹிர் காரியப்பர் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி அஞ்சல் தின நிகழ்வு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த உலக அஞ்சல் தினம் ஒக்டோபர் 9, 1874 இல் சுவிற்சலாந்தின் பேர்ன் நகரில், சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாக பிரகடனம் செய்யப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago