Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேஎல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்
உலக வங்கியின் நிதியில் 2021ஆம் ஆண்டுவரை, கிழக்கு மாகாண விவசாய அமைச்சால் அமுல்படுத்தப்படவுள்ள விவசாயத்துறை மேம்படுத்தல் திட்டத்தின் பங்குதாரங்களுக்கான கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில், நேற்று (06) நடைபெற்றது.
விவசாய உற்பத்திகளை அதிகரித்தல், விவசாயிகளின் செயற்திறனை மேம்படுத்துதல் , சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், சிறியளவு உற்பத்திகளில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை ஒருங்கிணைத்துச் செயற்படச் செய்தல், விவசாயத்தை முன்நிலைப்படுத்தியதான உட்கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விவசாயத்துறைசார்ந்து வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
விவசாய உற்பத்திகளின் பெறுமதிகளை அதிகரித்தல், நவீன விவசாயத் தொழில் நுட்பங்களை உள்வாங்குதல், விவசாயிகளுக்கான பயிற்சிகள், வர்த்தகமயமாக்கல், விவசாயத்துறையில் செயற்படுபவர்களின் தொழிலை நிறுவனமயமாக்கல் எனப் பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
3 பகுதிகளைக் கொண்ட இத்திட்டத்தின் ஊடாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை, கதிரவெளி, தும்பங்கேணி ஆகிய 3 கொத்தணி அலகுகளுக்குள் மொத்தமாக 26 கிராமங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா ஆகிய மாகாணங்களில் 125 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஐந்து மாகாணங்களிலும் மொத்தமாக 7 மாவட்டங்களில் 21 கொத்தணிக்கிராமத் தொகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
1 hours ago