Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில், முஸ்லிம் உலமாக் கட்சியின் முதலாவது கிளை, நேற்று (28) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்யிடம் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, ஏறாவூர், புன்னங்குடா வீதிக்கருகில் சமூக சேவகர் எம்.றிபாய் தலைமையில், இக்கட்சியின் முதலாவது கிளை திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது குறித்த திறப்பு விழாவிற்கு வருகை தந்த முஸ்லிம் உலமாக் கட்சியின் செயலாளர் சாஹீத் முபாறகிடம், மீனவ சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என தத்தமது மகஜர்களைக் கையளித்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது பிரச்சினைகளை விவரிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .