2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஊடகவியலாளர் ஜவ்பர்கான் இராஜினாமா

Editorial   / 2020 மே 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான்,  தனது காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

தனது ராஜினாமாக் கடிதத்தை, மட்டக்களப்பு உதவி தேர்தல் ஆணையாளருக்கு அவர் அனுப்பியுள்ளார்.

காத்தான்குடி நகர சபையின் மாதர்ந்த அமர்வில் நேற்று முன்தினம் (14) கலந்துகொண்ட பின்னர் தனது உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமாச் செய்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபை உறுப்பினராக கடந்த ஆண்டு பதவியேற்ற இவர், கட்சியின் தீர்மானத்துக்கமைவாக சுழற்சி முறையில் மற்றொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கும் பொருட்டு, தனது உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X