Niroshini / 2016 ஜூலை 25 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
வட்டார பிரிப்பின்போது எல்லைகள் துல்லியமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் வேண்டுகோளவிடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
எல்லை நிர்ணய ஆணைக்குழு தலைவர், அதன் அங்கத்தவர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சினுடைய பிரதிநிதிகள் உட்பட பல உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை(24) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது காத்தான்குடி வட்டார பிரிப்புக்கு முன்பாக அதனுடைய எல்லைகள் சரியாக பிரிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், காத்தான்குடியினுடைய எல்லைகள் தொடர்பாக 1987.05.12 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 453/18, 1997.07.04 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 58/1092 மற்றும் 1998.12.11 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 1057/16 ஆகியவற்றின் பிரகாரம் அமையப்பெற வேண்டிய எல்லைகளையும் அதன் பரப்பையும் பற்றி எல்லை நிர்ணய ஆணைக்குழுவினருக்கு தெளிவுபடுத்தியதுடன், அதற்கான சிறந்த தீர்வை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அத்தோடு, காத்தான்குடியின் சனத்தொகைக்கு ஏற்ப காத்தான்குடியினுடைய வட்டாரப் பிரிப்பு 2015.08.21 அன்று வெளியான இலக்கம் 1928/28 வர்த்தமானி பிரகாரம் எல்லை வரையறுக்கப்பட்டிருப்பது போதாது என்றும் அதனை 18 வட்டாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார்.
மேலும், மண்முனை வடக்கு மஞ்சந்தொடுவாய் வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டாரமாக மாற்றப்பட வேண்டும். இல்லாவிடின் அங்கிருக்கின்ற மட்டக்களப்பு மாநகர சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றார்.
புளியந்தீவு வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டாரமாக 2015.08.21 திகதியன்று வெளியான வர்த்தமானியின் பிரகாரம் ஆக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்பதை தெளிவுபடுத்தி மஞ்சந்தொடுவாய் வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டார தொகுதியாக மாற்றி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டார்.
மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரத்துக்கு முஸ்லிம்களினுடைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுகின்ற விதத்தில் அதனுடைய வட்டார எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழுவினரிடம் கேட்டுக்கொண்டார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago