2025 மே 08, வியாழக்கிழமை

ஏறாவூர் நகரசபையில் 13 வெற்றிடங்கள்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபையில் 13 ஆளணி வெற்றிடங்கள் உள்ளதாக நகரசபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரி, கணக்காளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், மருத்துவமாது, நூலகர், முகாமைத்துவ உதவியாளர், இறைவரிப் பரிசோதகர், சுகாதார மேற்பார்வையாளர், திண்மக்கழிவு முகாமைத்துவக் காப்பாளர் ஆகியவற்றில் ஒவ்வொரு  வெற்றிடங்களும்; சந்தை மேற்பார்வையாளர் மற்றும் சாரதி ஆகியவற்றில் இவ்விரண்டு வெற்றிடங்களும்  உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான வேண்டுகோள் உள்ளூராட்சி நிர்வாகத்துக்குப் பொறுப்பாகவுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக முதலமைச்சர்  கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X