2025 மே 14, புதன்கிழமை

ஏறாவூரில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஐந்து மாத கைக்குழந்தை அருகிலிருக்க அக்குழந்தையின் தாயினுடைய சடலம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகிலிவெட்டைக் கிராமத்திலுள்ள  வீட்டிலிருந்து புதன்கிழமை (26) மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கிராமத்தை சேர்ந்த கந்தையா பவித்திரா (வயது 17) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதானத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிவந்தபோது, மனைவி சடலமாக காணப்பட்டதாகவும் கைக்குழந்தை அருகிலிருந்ததாகவும் இவரது கணவர் மரண விசாரணையின்போது சாட்சியமளித்தார்.

பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மற்றும் ஏறாவூர் பொலிஸார்  திகிலிவெட்டைக் கிராமத்துக்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X