2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஏறாவூரில் முதல் கொரோனா மரணம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூரைச் சேர்ந்த 56 வயதுடைய ஆணொருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (27) அதிகாலை மரணமடைந்துள்ளார்.

இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு ஐ.டி.எச்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்  வழியில் உயிரிழந்துள்ளார்.

சடலம், குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை  கொரோனா வைரஸ் தொற்றால்  7 மரணங்கள் பதிவாகியுள்ளன. ஏறாவூரில் இதுவே முதல் கொரோனா மரணம் ஆகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X