2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ், அபினுடன் மூவர் கைது

Editorial   / 2024 ஜனவரி 19 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஐஸ் வியாபாரி ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்திருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி   ஜி. கஜநாயக்க தெரிவித்தார்

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வாகனம் திருத்துமிடம் ஒன்றில் வைத்து குறித்த ஐஸ் வியாபாரி இரண்டு கிராம் 110 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்

அதே நேரம் காத்தான்குடி அலியார் சந்தியில் வைத்து இரண்டு கிராம் 45 மில்லி கிராம் போதை பொருளுடன் 29 வயது நபர் ஒருவரும் ஊர்வீதியில் வைத்து 190 மில்லி கிராம் அபினுடன் 54 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

வாகனம் திருத்தும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள ஐஸ் வியாபாரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X