2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒருவகை மாத்திரைகள், கஞ்சாவுடன் இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் ஒருவகை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 24 வயதுடைய ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கைதுசெய்த பொலிஸார், அவரிடமிருந்து 150 மில்லிகிராம் கொண்ட 170 மாத்திரைகளையும் 5 மில்லிகிராம் கஞ்சாவையும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.   

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர், மாத்திரைகளுடன் கல்முனைப் பிரதேசத்திலிருந்து வாழைச்சேனை பிரதேசத்துக்குச் செல்வதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இளைஞரை கிரான் பிரதேசத்தில் வழிமறித்துச் சோதனையிட்டபோது, அவரிடம் மேற்படி மாத்திரைகளும் கஞ்சாவும் இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X