2025 மே 14, புதன்கிழமை

குடும்பிமலை குளக்கட்டு புனரமைப்புப் பணிகளை கி.மா. விவசாய அமைச்சர் பார்வை

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, குடும்பிமலை ஆத்திக்காடு குளக்கட்டு மற்றும் வாய்க்கால் புனரமைப்புப் பணிகளை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்; கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று பார்வையிட்டார்.

மத்திய அரசின் விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற இப்புனரமைப்புப் பணி தொடர்பில் மக்கள் தங்களின்; குறைபாடுகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்தே இவர் அங்கு சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

இதன்போது, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் அந்த அதிகாரிகளை இச்செயற்திட்டம் தொடர்பாக கண்காணித்து அப்பிரதேச கமநல அமைப்பினருடன் கலந்துரையாடி உரிய வகையில் இதனை மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X