2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு; 9 பேர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில்,  கசிப்பு உற்பத்தி நிலைலையங்களில், மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை, சனிக்கிழமையும் (16) நேற்று ஞாயிற்றுக்கிழமையும் (17) மேற்கொள்ளப்பட்டதாக, மாவட்ட மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.தயாலேஸ்வரகுமார் தெரிவித்தார்.

இதன்போது, வாகரை, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில், 25  லீற்றர் கோடா, 10 லீற்றர் கசிப்பு, 6.5 லீற்றர் கள்ளு, 0.6 லீற்றர் பியர் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் மாவட்ட மதுவரித் திணைக்களப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X