Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
வா.கிருஸ்ணா / 2017 டிசெம்பர் 17 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியின் காட்டுப்பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த இடம், வவுணதீவு பொலிஸாரால் இன்று (17) காலை முற்றுகையிடப்பட்டுள்ளது.
வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனையில் உள்ள காட்டுப்பகுதியிலேயே, இந்த முற்றுகை இடம்பெற்றதாக, வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ரி.நசீர் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸ் குழுவினர், முற்றுகையை மேற்கொண்ட நிலையில், அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த மூவர் தப்பிச்சென்றுள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முற்றுகையின்போது, கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் 540 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் மீட்கப்பட்டதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ரி.நசீர் தெரிவித்தார்.
இலங்கையில் வறுமையான பிரதேச செயலகத்தில் முதல் இடத்தில் உள்ள வவுணதீவு பிரதேசத்தில் சட்ட விரோத மதுபாவனையினை தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தப்பிச்சென்றுள்ள சந்தேக நபர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago