2025 மே 08, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, செங்கலடிப் பிரதேசத்தில் கஞ்சாவை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் அம்முச்சக்கரவண்டிச் சாரதி இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 10 கஞ்சாக் கட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி -பதுளை வீதி வழியாக கரடியனாறுப் பிரதேசத்துக்கு  33,000 மில்லிகிராம் நிறையுடைய  10 கஞ்சாக் கட்டுக்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்தமை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலைத் தொடர்ந்து, குறித்த முச்சக்கரவண்டியைச் சோதனையிட்டபோது கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X