2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சா மற்றும்; கஞ்சா சுருட்டை விற்பனைக்காக வைத்துக்கொண்டு வீதியில் நடமாடியதாகக் கூறப்படும் 3 பேரை மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களில் காளிகோவில் வீதியைச்  சேர்ந்த 22 வயதுடையவரிடமிருந்து 2400 மில்லிகிராம் கஞ்சாவையும் ஏறாவூர் ஐயன்கேணியைச் சேர்ந்த 26 வயதுடையவரிடமிருந்து 3190 மில்லிகிராம் கஞ்சாவையும் மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடையவரிடமிருந்து கஞ்சா சுருட்டொன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இச்சந்தேக நபர்களை நாளை திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X