2025 மே 14, புதன்கிழமை

குடும்பஸ்தர் மீது தாக்குதல்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐயன்கேணியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முஹம்மது ஷஹீத் (வயது 49) எனும் குடும்பஸ்தர் மீது, சவுக்கடிப் பகுதியில் வைத்து நேற்றிரவு (08), இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியரான குறித்த நபரை, கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் மீட்ட பொதுமக்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவரின் மோட்டார் சைக்கிள், தாக்குதல் நடத்தப்பட்ட அதே இடத்தில் கிடந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .