2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

குளவி தாக்குதலில் 8 மாணவர்கள் பாதிப்பு

Freelancer   / 2023 நவம்பர் 08 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - வவுணதீவு பகுதியில் பாடசாலை மாணவர்கள் மீது குளவி தாக்கியதில் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று புன்கிழமை 08) காலை 7 மணியளில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுணதீவு கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் மாணவர்கள் சம்பவதினமான இன்று காலை 7.00 மணியவில் வீதியால் நடந்து சென்ற நிலையில் குறிஞ்சாமுனை பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் மாணவர்கள் மீது தாக்கியதையடுத்து 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அருகிலுள்ள தாண்டியடிபிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்

மேலும் குளவி கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக நடவடிக்கை எடுத்துவருதாக பொலிசார் தெரிவித்னர். M 

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X