Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 08 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன் , வ.சக்தி
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது குளவி தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (08) பதிவாகியுள்ளது.
வவுணதீவு கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் மாணவர்கள் வீதியில் செல்லும் போது குறிஞ்சாமுனை பகுதியில் வீதிக்கு அருகிலுள்ள பனைமரத்தில் கூடுகட்டியுள்ள குளவிகள் மாணவர்களை தாக்கியதையடுத்து 8 மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தாண்டியடிபிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்
இந்த குளவி கூ:கட்டியுள்ள பனை மரங்களில் இருந்து கூடுகளை அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
51 minute ago