2025 ஜூன் 28, சனிக்கிழமை

கேள்விமனு கோரல்

Editorial   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில், துஷாரா 

ஏறாவூர் நகர சபைக்கு கீழுள்ள ஏறாவூர் தெற்குப் பொதுச் சந்தைக் கடைத்தொகுதியின் கடைகளுக்கான திறந்த கேள்விமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக, ஏறாவூர் நகர சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த கேள்விமனுக்கள், இன்றிலிருந்து கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பப்படிவங்களை ஏறாவூர் நகரசபையில் பெற்றுக்கொண்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 27ஆம் திகதி நன்பகல் 12 மணிக்கு முன்னர் ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டார்

இது 2018.01.01 தொடக்கம் 2018.12.31 வரையான ஒரு வருடத்துக்கான கேள்வி அறிவித்தல் எனவும் இறுதித் தினமான அன்றைய தினம் 3 மணிக்கு கேள்விமனுக்கள் யாவும் திறக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .