2025 மே 21, புதன்கிழமை

கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு

நடராஜன் ஹரன்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சின் செயற்றிட்டத்தின் கீழ், கால்நடை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கோழிக்குஞ்சு வளர்ப்பை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு, கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு, முதலைக்குடாவில் நேற்று (02) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தால் முனைக்காடு, முதலைக்குடா பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 6,500 ரூபாய் பெறுமதியான கோழிக்குஞ்சுகள் 40 பேருக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா, கால்நடை அபிவிருத்தித் திணைக்கள உத்தியோகஸ்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .