2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிலின்டர் வெடித்ததில் வீடு முற்றாக சேதம்

Sudharshini   / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலின்;டர் வெடித்ததில், குறித்த வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாக்கியுள்ளதென களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று திங்கட்கிழமை (01) மாலை, களுதாவளை வன்னியார் வீதியில் அமைந்துள்ள செல்லையா ஜீவரத்தினம் என்பவரின் வீட்டில் எரிவாயு சிலின்;டர்  திடீரென வெடித்துள்ளது.

இதில் குறித்த வீட்டிலிருந்த அனைத்து பெறுமதிவாய்ந்த பொருட்களும் சேதமாகியுள்ளதென களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X