2025 மே 14, புதன்கிழமை

சமூக சேவை படையணிகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராயும் மாநாடு

பேரின்பராஜா சபேஷ்   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமூக சேவை படையணிகளை செயற்படுத்துவது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நேற்று (01) மட்டக்களப்பு டேபா மண்பத்தில் நடைபெற்றது.

2020ஆம் ஆண்டில், பாதுகாப்பான சிறுவர் சமூகத்தை உருவாக்குவதே, இத்திட்டத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க நிறுவனங்களின் பங்கேற்புடன், யுனிசெப், சர்வோதய நிறுவனம் ஆகிய அமைப்புக்கள் இணைந்ததாக, நாட்டின் ஐந்து மாவட்டங்களில் இத்திட்டம்  பரீட்சார்த்தமாக செயற்படுத்தப்படுகிறது.

கல்வி, சுகாதாரம், நீதி,  சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி, சிறுவர் நன்னடத்தை ஆகிய அமைச்சுக்களின் நேரடி ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி மற்றும் பதுளை ஆகிய ஐந்து மாவட்டங்களிலுள்ள ஐந்து பிரதேச செயலகங்களின் ஐந்து கிராமங்களில்  முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் வெற்றியளித்துள்ளதையடுத்து நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனால், சம்பந்தப்பட்ட அனைத்து துறைசார் அதிகாரிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நொச்சிமுனை கிராமத்தில் அமுல்செய்யப்பட்ட இத்திட்டம் பாரிய வெற்றியை ஏற்படுத்தியுள்ளதாக புள்ளிவிவரங்கள் மூலம் அறியவந்துள்ளது.

பாடசாலை இடைவிலகல், குடும்ப வறுமை, தாய் வெளிநாடு சென்றமையால் ஏற்பட்ட பாதிப்பு, மதுபோதை, சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் மற்றும் தற்கொலை முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு பரிகார நடவடிக்கைகளை செயற்படுத்தியதில் வெற்றிகாணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X