Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டங்களை, மார்ச் 01ஆம் திகதி முதல் 08ஆம் திகதிக்குள் நடத்தி முடிப்பதென, மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் நேற்று (18) நடைபெற்ற இக்கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்தின்படி,
மண்முனை மேற்கு உன்னிச்சை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், வவுணதீவு பிரதேச செயலகத்தில் மார்ச் 01ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு, ஏறாவூர்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள உறுகாமம், கித்துள்வௌ, வெலிகாகண்டி, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம், செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
போரதீவுப்பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறு நீர்ப்பாசனத் திட்டங்கள், வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் மார்ச் 02ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு, மண்முனை தென்மேற்கு - கடுக்காமுனை, புழுக்குணாவி, அடைச்ச கல், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கோரளைப்பற்று வடக்கு - கட்டுமுறிவு நீர்ப்பாசனம், மதுரங்கேணி, கிரிமிச்சை, சிறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான ஆரம்பக் கூட்டம், வாகரைப் பிரதேச செயலகத்தில் மார்ச் 08ஆம் திகதி காலை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2.30 மணிக்கு, கோரளைப்பற்று தெற்கு வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான கூட்டம், கிரான் கோரகல்லிமடு ரெஜி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago