Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 16 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாகச் சீர்குலைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் கடல் கொந்தளிப்புக் காரணமாக கடலுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்த்துள்ளனர்.
மீன்பிடி நடவடிக்கைககளிலிருந்து மீனவர்கள் முற்றாக விலகியுள்ளதால், மீனவர்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் சுமார் 25 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வட,கிழக்குத் திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படுமென, மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுமெனவும் மீனவ சமூகம் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும், அவர் எச்சரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
46 minute ago