Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குசலானமலைப் பகுதியில்; மறைத்துவைக்கப்பட்டிருந்த ரீ -56 ரக தன்னியக்கத் துப்பாக்கியொன்றை இன்று வியாழக்கிழமை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று இத்துப்பாக்கியை மீட்டதாகவும் இத்துப்பாக்கி பொலித்தீனினால் சுற்றப்பட்டுக் காணப்பட்டதாகவும்; பொலிஸார் கூறினர்.
கடந்த யுத்த சூழ்நிலையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளினால் இத்துப்பாக்கி மறைத்துவைக்கப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
30 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
33 minute ago
48 minute ago