2025 மே 19, திங்கட்கிழமை

தாமரை மொட்டு வேட்பாளரும் ஆதரவாளர்களும் வைத்தியசாலையில் அனுமதி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக தாமரை மொட்டு சின்னத்தின் போட்டியிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பொதுப் பட்டியல் வேட்பாளரான யுவதி ஒருவரும் பிரசார ஆதரவாளர்களான இருவர் உட்பட 3 பெண்கள் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் வன்முறையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறாவூர் ஜூப்ரியா வட்டாரத்தில் போட்டியிடும் தாமரை மொட்டு அணியின் பெண் வேட்பாளருக்கு ஆதரவாக, அவரது குழுவினர் வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தபோது, மாற்று அணியைச் சேர்ந்த ஆண் ஒருவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இதன்போது, இந்தப் பெண்களைத் தாக்கத் துவங்கியதாகவும் அதில் காயமடைந்த பெண்கள் மூவரும் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணியான பெண்ணொருவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென, வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

பொதுப்பட்டியல் வேட்பாளரான யுவதியும் பிரசார ஆதரவாளரும் தொடர்ந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X