2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘தேசிய அரசாங்கத்தை முழுமையாக ஆதரிப்போம்’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கடசி அரசாங்கம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை இணைத்து, தேசிய அரசாங்கத்தை அமைத்துக்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குமென, அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

எனினும், அமைச்சர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு, தமது கட்சி ஆதரவு வழங்கமாட்டாதெனவும், அவர் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பொதுநல அமைப்புகளுக்கு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் ந.வில்வரத்தினம் தலைமையில் நேற்று (12) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது விளையாட்டுக் கழகங்கள், மாதர் அமைப்புகள், சமய ஸ்தலங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் தளபாடங்களும், இலத்திரனியல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின்மூலம், இப்பொருள்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், தேசிய அரசாங்கம் அமைப்பதில் எங்களுக்கு எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை எனவும் தற்போதுள்ள அமைச்சுகளை வைத்துக்கொண்டு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்துச் செயற்பட வேண்டுமென்றார்.

 

தற்போது வரையப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இல்லை. தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சிப் பிரதிநிதிகளும் இணைக்கப்படுவார்களாகவிருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரக்கூடிய சூழல் ஏற்படும். தேசிய அரசாங்கம் வருமாகவிருந்தால் புதியாக கொண்டுவரப்படும் அரசியல் யாப்பினை நிறைவேற்ற முடியும்.  

புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மை மக்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன அதனை பெரும்பான்மை சமூகம் ஏன் எதிர்க்க வேண்டும். உருவாக்கப்படும் அரசியல் யாப்பு நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் உரியது.

தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு சர்வதிகாரத் தன்மைகள் கொண்டது. அவை நீக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் சகல பிரஜைகளுக்கும் ஏற்ற வகையில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்ட வேண்டும் நாடாமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக உள்ளது: என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X