Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 29 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை, நாவிதன்வெளி பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்வு, சனிக்கிழமை (28) இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலகம், அல்-அஸானி மகளிர் சங்கம், மற்றும் அல்-அமீனா மகளிர் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு பேரணி, நாவிதன்வெளி 5ஆம் கிராமம் அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலக மகளிர் உத்தியோகத்தர் எம்.ஜெனீதா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். நஜீப், அக்கரைப்பற்று மனித உரிமை இல்லத்தின் சட்டத்தரணி என். நிதர்ஷன் அக்கரைப்பற்று மனித உரிமை இல்லத்தின் இணைப்பாளர் ஏ. நிஸாந்தி, நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ரீ.எம். ஹஸன், சவளக்கடை, நாவிதன்வெளி பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஏம். கஸ்பியா பீபி, பிரதேச செயலக உள வள உத்தியோகத்தர் ரீ.தாயழினீ, பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எம்.எச். ஹிபானா, உட்பட மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், பொது மக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
21 minute ago
28 minute ago