2025 மே 14, புதன்கிழமை

பெண்ணை கத்தியால் வெட்டியவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

குடும்பப் பெண்ணொருவரை கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 33 வயதுடைய ஒருவரை கல்முனையில் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் நேசராணி (வயது 35) என்பவரே கத்தி வெட்டுக் காயங்களுக்குள்ளானார்.

தனது கணவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தன்னை கத்தியால் வெட்டி தனது வலது கையில் காயம் ஏற்படுத்திய நபர் தனது கணவரின் சகோதரன் எனவும் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருந்தார்.இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை தேடப்பட்டுவந்த நிலையில், கைதுசெய்யப்பட்டார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X