Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 10 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட பெண் ஒருவர் உட்பட நான்கு பேரைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை இரவு விவேகானந்தபுரம் பகுதியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடமொன்றில் புதையல் தோண்ட முற்பட்ட குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தியபோது, இரண்டு பேரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்கள் இருவரும் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை மற்றுமொருவரைக் கைதுசெய்துள்ளனர்.
காக்காச்சிவெட்டை, ஆனைகட்டியவெளி, குருமண்வெளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago