2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

படைப்புழு கட்டுப்பாடு தொடர்பிலான விழிப்புணர்வு

Mayu   / 2023 டிசெம்பர் 18 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோளன் பயிர்ற் செய்கையில் படைப்புழு கட்டுப்பாடு தொடர்பிலான விழிப்புணர்வுச் செயலமர்வு மட்டக்களப்பு   களுமுந்தன்வெளிக் கிராமத்தில் இன்று (18)  நடைபெற்றது.

பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் பி.சகாப்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய  சேளன்  பயிற்செய்கையில்  தாக்கத்தைச்  செலுத்தும்  படைப்புழுக்களைக்  கட்டுப்படுத்தும்  செயற்பாடுகளுக்கு தாம்  முயற்சிப்பதாக  இதன்போது  விவசாயிகள்  கருத்துத் தெரிவித்தனர்.

மேலும்  இந்நிகழ்வில், விவசாயத்திணைக்களத்தின்  மட்டக்களப்பு  பிரதி  விவசாயப்  பணிப்பாளர்  வி.பேரின்பராஜா, உதவி விவசாயப் பணிப்பதளர் எஸ்.சித்திரவேல்,  பேராதனை விவசாயத்  திணைக்களத்தின் தலைமைக்காரியாலய நோய் பீடை பராமரிப்பு ஆராய்ச்சி உத்தியோகஸ்த்தர் தம்மிக்கா சரச்சந்திர உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

வ.சக்தி 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .