Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 27 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கட்டுநாயக்காவிலிருந்து காத்தான்குடி நோக்கி வந்த பஸ் மீது, மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் வைத்து இன்று (27) அதிகாலை கற்கள் வீசப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு மத்திய பஸ் டிப்போவுக்குச் சொந்தமான இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ், கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு, காத்தான்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, சத்துருக்கொண்டானில் வைத்து குறித்த பஸ்ஸின் மீது கற்கள் வீசிப்பட்டுள்ளன.
இதனால் பஸ்ஸின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி மற்றும் நடத்துநர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
22 minute ago
57 minute ago