2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பாரிய விபத்து ; வயோதிபர் படுகாயம்

Janu   / 2024 மார்ச் 05 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன் வெளிப்பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம்  ஞாயிற்றுக்கிழமை (03)   இடம்பெற்றுள்ளது . 

மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த  சிறிய ரக லொரி வாகனமொன்று  , பிரதான வீதியை கடக்க முயன்ற வயோதிபர் ஒருவர்  மீது மோதியே  இவ் விபத்து ஏற்பட்டுள்ளதுடன்  குறித்த  முதியவரை  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர  சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர் . 

இதன் போது  வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மோட்டார் சைக்கிள்களுக்கும் , எரிவாயு சிலிண்டர் வாகனமொன்றுக்கும்    சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது . 

மேலும் அதிக வேகம் காரணமாகவே  இவ்  விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்  இது தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

வ.சக்தி 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X