Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பாழடைந்த கிணறொன்றில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீயில் அமைந்துள்ள பாழடைந்த கிணறிலிருந்து துர்நாற்றம் வெளிவருவதாக நேற்று (06) மாலை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸால் குறித்த கிணற்றினுள் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளனர்.
சுமார் 35 வயதுக்கு மேல் மதிப்பிடக்கூடிய குறித்த சடலம், இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸா தெரிவித்தனர்.
குறித்த இடத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, பொலிஸ் பரிசோதனைப் பிரிவு மற்றும் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் பரிசோதனை மற்றும் நீதிபதியின் உத்தரவுக்கமைய கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுமென, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
34 minute ago
35 minute ago